மணிரத்னம் படத்திலிருந்து விக்ரம் விலகல்?
ராவணன் டப்பா ஆனபிறகும் மணிரத்னம் அழைத்தார் என்று படப்பிடிப்பை கேன்சல் செய்து அவரைப் பார்க்கப் போனார் விக்ரம். இந்த அழைப்பு பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது தொடர்பாக.
இதே படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்யும், மகேஷ்பாபுவும் நடிப்பார்கள் என்ற செய்தி வெளியான பிறகு விக்ரமின் உற்சாகம் வடிந்துவிட்டது.
எதிர்பார்த்தது போல முக்கியமான ரோல்கள் அவர்களுக்கு, இரண்டாவது ஹீரோ போன்ற வேடம் விக்ரமுக்கு. இதனால் படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
விக்ரமுக்குப் பதில் அந்த வேடத்தில் ஆர்யா நடிப்பார் என தெரிகிறது.
No comments:
Post a Comment