Sunday, March 20, 2011

Tamil Cinema News


கன்னட சினிமாவிலிருந்து விலகுகிறேன்! – ரம்யா அதிரடி






தொடர்ந்து தனக்கு எதிராக சிலர் சதி செய்து வருவதால், கன்னட சினிமாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக பிரபல நடிகை ரம்யா (குத்து ரம்யா) அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ரம்யா நடித்த ‘தண்டம் தஷகுணம்’ என்ற கன்னடப் படத்தின் இசை வெளியீட்டு விழா பெங்களூரில் நடந்தது. இந்த விழாவில் ரம்யா கலந்து கொள்ளவில்லை. அந்த நேரத்தில் பர்னிச்சர் கடையில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தாராம் ரம்யா.
படத்தின் நாயகி என்ற முறையில் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு, படத்தின் விளம்பர நடவடிக்கைகளில் பங்கெடுக்க ரம்யா தவறிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் குற்றம் சாட்டினார். அத்துடன் கன்னட பிலிம்சேம்பரிலும் ரம்யாவுக்கு எதிராக புகார் செய்தார். உடனே அந்தப் புகாருக்கு விளக்கம் அளிக்க 48 மணி நேரம் கெடு விதித்தனர் பிலிம்சேம்பர் நிர்வாகிகள்.
இதனால் கடும் கோபமடைந்த ரம்யா, தனது மைக்ரோ பிளாகில் இப்படி எழுதியுள்ளார்:
“இனி நான் எந்தப் படத்திலும் நடிக்கப்போவதில்லை. கன்னட சினிமா உலகில் இனியும் இவர்களின் சதியை எதிர்த்து என்னால் போராட முடியாது. இருக்கும் இந்த குறைந்த ஆயுளில் நிம்மதிதான் முக்கியம். இங்கு நடித்து அந்த நிம்மதியைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. எனக்குப் பிடித்த வேலையை கன்னட சினிமாவுக்கு வெளியே செய்யப் போகிறேன். கன்னட சினிமாவிலிருந்து விருப்ப ஓய்வு பெறுகிறேன்..”, என்று குறிப்பிட்டுள்ளார்.
தனக்கும் தயாரிப்பாளருக்குமான தகராறு குறித்து அவர் கூறுகையில், “கணேஷ் எதிர்ப்பார்த்த விளம்பரத்துக்கும் அதிகமாகவே இப்போது கிடைத்துவிட்டது. ஒருவேளை நான் அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்தால் கூட இவ்வளவு பப்ளிசிட்டி கிடைத்திருக்குமா… அது சரி, என்னிடம் கடனாக வாங்கிய பெரும் தொகையை தரும் ஐடியா உள்ளதா கணேஷ்… நீங்கள் எனக்கு எழுதிக் கொடுத்த பத்திரங்கள், கையெழுத்துப் போட்டுக் கொடுத்த செக்குகள் எல்லாம் அப்படியேதான் உள்ளன. விரைவில் அது தொடர்பான வழக்கைச் சந்திக்கத் தயாராகுங்கள்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.




No comments:

Post a Comment