Wednesday, December 29, 2010

வைரமுத்து கவிதைகள்






வைரமுத்துவின் கவிதைகள்  

இறக்கமுடியாத சிலுவைகள்

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!


அழகு - Others

அழகு 

பார் அழகு
பார்க்கும் விழி அழகு
பார்ப்பதெல்லாம் அழகு

இருள் அழகு - அதிலே
ஒரு துளி ஒளியழகு

மலை அழகு - ஆங்கே
பொழியும் மழையழகு

சிலை அழகு - சிற்பியின்
கலை அழகு

ஆண் அழகு - அவன்கொண்ட
ஆண்மை அழகு

பெண்மை அழகு - அவள்ஈனும்
தாய்மை அழகு

மொழி அழகு - செந்தமிழாயின்
அதுவன்றோ அழகு

உண்மை அழகு - பொதுநல
பொய்யும் அழகு

பிறப்பு அழகு - பிறர்கெனின்
இறப்பும் அழகு

திருமணம் அழகு - மனமிரண்டும்
ஒன்றாயின் இல்லறம் அழகு

துன்பம்நீக்கும் துறவறம் அழகு
மானம்காக்கும் மறம் அழகு
மகுடம்கொண்ட சிரம் அழகு
வாரிவழங்கும் கரம் அழகு

மனம் அழகு - எனின்,
யாவும் பேரழகு..!


இவன் மானிடன்..! 

மானிடனாய்ப் பிறந்துவிட்டோம் - நாம்
மதிகெட்டு இருந்துவிட்டோம்


ஏட்டிலுள்ளதை படித்துவிட்டோம் - அதையேன்
படித்தோம் மறந்துவிட்டோம்


மதசாதியால் பிரிந்துவிட்டோம் - மனம்,
அதை சகதியால் நிரப்பிவிட்டோம்


பனத்தை மனதிலே எத்திவிட்டோம் - குணம்,
அதை குப்பையிலே கொட்டிவிட்டோம்


கொள்ளாத குற்றங்களை செய்திடுவோம் - பலம்
இல்லாத எளியவன்மேல் பழிசொல்லிடுவோம்


தள்ளாத வயது சென்றிடுவோம் - அன்றும்
இல்லாத பெருமை பேசிடுவோம்


மானம்கெட்ட ஈனப்பிறவியடா மானுடன் - இவன்
மாண்டு அழிந்தாலும் மனம் குணம் மாறிடன்


கேளிக்கை..! 

இருக்கின்ற நாழியெல்லாம் இன்பமாய் களிப்பதும்
இரவுடன் பகலும் சுகமாய் துயில்வதும்

கணமெல்லாம் கேளிக்கையில் திளைப்பதும்
திரைகூத்தாடியை சிரஸ்தார் என்பதும்

மதி மயக்கும் மது அருந்துவதும்
மனம் பசப்பும் மாது பின்செல்வதும்

உரிமைகளையும் உடைமைகளையும் இழக்குந்தருணம்- நம்
உறவுகளையும் கடமைகளையும் மறக்குந்தருணம்

மதிகெட்டு மனிதன் செய்யும் தருணம் - ஆங்குநல்
மதியுள்ளோர் அதை மாற்றிட வரணும்..!

உன் கூந்தல்  

சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது. 


காதல் கவிதை 

நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்

உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!

தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்? 


விலைவாசி 

ஏறும் இறங்காது
ஒருவழிப் பாதை
விலைவாசி 


நீ இருக்கிறாய் 

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!


நீ எந்த ஊர் ஆப்பிள் 

பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்ளைக் காட்டி?
இது எந்த ஊர் ஆப்பிள்?
?அது எந்த ஊர் ஆப்பிள்? என்று
கேட்டுக்கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம் ஒன்றுகூடிக்
கேட்டன?
நீ எந்த ஊர் ஆப்பிள்??


மழை 

ஓடிவந்து என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை


ஒற்றை குடை 

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்


நெஞ்சு பொறுக்குதில்லையே 

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?

அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச்

சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே
கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்
சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால்
ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர்

எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்


கவிதை 

கவிதை வேண்டுமென
பேனா தூக்கினேன் ...!!
கைகள் தானாய் - கிருக்குதடா
உன் பெயரை ...!! 


கொலுசு 

உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது


முதன்முதல் 

நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன்முதல்
உன்னை கனவு காண ஆரம்பித்தேன்


உன் மெளனங்கள் 

காயப்படுத்துவதற்கென்றே
மெளனங்கள் சிலவற்றை
உருவாக்குகிறாய்.
பூப்பறித்தலின் ஆனந்தத்தை
அவை உனக்களிக்கலாம்.
அல்லது
அப்பழுக்கற்ற குழந்தைமையின்
குதூகலத்தை உணர்வுகளில்
தெளிக்கலாம்.
இடுகாட்டில் எரிகின்ற உன்
சுயத்தின் கருகியவாடையை
என்னை நோக்கி சுமந்து
வருகின்றன
அந்த மெளனங்கள்.
வலி நிறைந்த
புன்னகையுடன்
இருகரம் விரித்து வரவேற்கிறேன்.
எங்கோ
உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றன
என் கல்லறைக்கான
செங்கல்கள்.


எழுத கற்றுக் கொடுத்தேன் 

தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்


திருமணங்கள்  

பல திருமணங்களும் முறிந்து போவது கருத்து
வேறுபாடுகளால் அல்ல... அந்த
வேறுபாடுகளை எதிர்கொள்ளத்
தெரியாததால்தான்!


விலகிப்போகாதே - காதல் தோல்வி கவிதைகள்

விலகிப்போகாதே 

பூக்களெல்லாம் முட்களாக
கண்ணீர் துளியோ இரத்தமாக
காலங்கள் சிதறின
காதலி உன்னை தேடி
தென்றல் கூட என்னை கொல்ல
நிலவின் ஒளியும் தீயை வீச
உயிர் வலி உணர்கிறேன்
நீயுமின்றி உருகிப்போனேன்
மழையின் துளிகள் அமிலம் போல
உடலில் விழுந்து ரணங்கள் ஆக்கும்
விலகிப்போகாதே
தொலைந்து போவேனே
நான் 


என் இராஜஸ்தான்* காதலியே  

குஜ்ஜாரின்* விருப்பமா
கொளுத்தும் பாலையா
உன் பார்வை

* பிறமொழிச்சொல் 


மகராஷ்டிர* என் காதலியே  

சிவசேனை சீண்டலா
சிக்க வைக்கும் தூண்டிலா
உன் பார்வை

* பிறமொழிச்சொல் 


என்னவள்.. 

வெண்ணிலா
தோன்றும் நேரத்தில்
என் காதல்
தேவதை ஞாபகம்!

பூக்கள்
தீண்டிடும் தென்றலே
என் இதயம்
அவளென்று சொல்லிப்போ!

வானத்தில் தூறிடும்
மழைத்துளி என்னவள்!

விண்மீன்கள் சிதறலில்
என்னவளின் புன்சிரிப்பு!

என் நெஞ்சம்
எங்கும் அவள் முகம்
அவள் காணா
காலம் காயம்படும்!

எனது சுவாசமே
உனது மடியினில்
சாக தோன்றுதே!!!


பீகார் என் காதலியே  

நச்சல்களின் காட்டமா
நறுந்தேனின் கூட்டமா
உன் பார்வை

தமிழ் நாட்டு என் காதலியே  

தாமரை பூத்த தாவணியா
தமிழால் காய்த்த பௌர்ணமியா
உன் பார்வை 


அழகு சாத்தானே! - காதல் கவிதை

அழகு சாத்தானே! 

காதலில் கால்கள் தடுக்க
கண்களும் காண துடிக்க
வந்தாயே எனது நெஞ்சுக்குள்ளே!

தென்றலும் தீயை இறைக்க
பூக்களும் போர்கள் தொடுக்க
சென்றாயே தூரப்பார்வையிலே!

காதலலை ஒன்று
கரையை கடக்க...
சுனாமியை போல
என்னை இழுக்க...

அழகு சாத்தானே!
என்னை தூக்கி செல்லடி..... 


அவளும் நானும் .... 

நாளுக்கு ஒரு பார்வையன
சிக்கனமாய் காதலித்து
சிரிதுஅளவு இடம்பிடித்தேன்
செம்பருத்தி அவள்
மனதில் .
நாள் குறித்து நோட்டமிட்டு
துளி துளியாய் துயில்
உரித்து
துரிதமாய் -எனை
துருவாரி
தூக்கமின்றி நான்
அழைந்தேன் -என்
தேவதை அவள்மீது
படையெடுத்து -என்
வீடு கடத்தி மாலையிட்டு
மணமுடிப்பேன்
மங்கையவளை....


நினைவுகளுடன்  

என் இரு கண்களிலில் மோதி
மனதில் விழுந்து ..
இரவு கனவுகளில் வளர்ந்து ...
தூக்கத்தை கலைத்து ..
உலகமே நீ மட்டும்
என நினைக்க வைத்துவிட்டு ...
என்றும் போல வருகிறாய்
செல்கிறாய் ....
ஆனல் நான் மட்டும்
உன் நினைவுகளுடன்
உறங்கவில்லை ...
குளிக்கவில்லை
சாப்பிடவில்லை ...
எதுவும நடக்கவில்லை
என்னை இம்சிக்க
யார் உன்னை அனுப்பியது ..... 


உறவு பாலம்  

கனவுகளின் காதல் தேசம்
கவிதைகளின் தொகுப்பாளினி ..
மக்கள் பெருக்கத்திற்கு
மகத்தான மகசூல் ...
தாய்நாட்டின் தலைமகள் ..
ஆண்களின் உறவு பலம் ..
உலகத்தின் நாளைய
விழுதுகள் விடும்
ஆலமரம் ....


நினைவு  

கவி பேசித்திரிந்த வாழ்வில்
என் விழி பேசவைத்த உன்னை
என் உயிர் பேசும் வரை
நினைத்திருப்பேன்...


காதல் செயய  

நினைவுகலில் நீந்தி சென்று
கனவுகளில் கலந்து விட்டு ...
தூக்கத்தை தூக்கிலிட்டு ...
வாழும் என்ஜீவனே ...
வருவாயோ முழுதும்
தருவாயோ ...
உண் மனதுக்குல்
நான் வாழ
நீ வேண்டும் .. 

1 comment: