Sunday, March 20, 2011

Tamil Cinema News


எனக்கு எல்லாமே பூமிகா கணவர்தான் : அனுஷ்கா






எனக்கு எல்லாமே பூமிகா கணவர்தான் என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார். என்ன இது… புது கூத்து என நினைக்க வேண்டாம். இந்த ஆறடி உயர அல்வாத் துண்டுக்கு யோகா கற்றுக் கொடுத்ததே நடிகை பூமிகாவின் கணவர் பரத் தாகூர்தானாம். அந்த காலகட்டத்தில் அனுஷ்காவுக்கு ஒரு குருவாக எல்லாமுமாக இருந்து கற்றுக் யோகா கொடுத்ததால்தான் இந்த அளவுக்கு உயர முடிந்தது என்று கூறி கண் சிமிட்டுகிறார் அனுஷ்கா.
சினிமா வாய்ப்பு கிடைத்தது எப்படி? என்பது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் ஒரு யோகா ஆசிரியை. நிறைய பேருக்கு யோகா கற்றுக் கொடுக்க வேண்டும் என்றுதான் இதை படித்தேன். நான் நடத்திய யோகா வகுப்புக்கு தெலுங்கு இயக்குனர் ஒருவர் யோகா கற்றுக்கொள்ள வந்தார். அவர்தான் என்னை நடிகையாக்கி விட்டார். யோகா மூலம் கிடைத்த யோகம்தான் இந்த சினிமா வாழ்க்கை. நடிகை பூமிகாவின் கணவராகி விட்ட பரத் தாகூர்தான் எனக்கு யோகா கற்றுக் கொடுத்த குரு. ஒரு குருவாக எனக்கு அவர் எல்லாமுமாக இருந்து கற்றுக் கொடுத்தார். என்னுடைய வளர்ச்சியில் அவருக்கும் முக்கிய பங்கு உண்டு, என்று கூறியுள்ளார்.
நகைகள் அணிய தனக்கு பிடிக்காது என்று கூறியிருக்கும் அனுஷ்கா, சேலை, மர்டர்ன் டிரெஸ் என எந்த மாதிரி உடை அணிந்தாலும் நகைகள் போட்டுக்கமாட்டேன். நான் உயரமாக இருப்பதால்தான் நடிக்க வாய்ப்பு வந்தது. சில நேரங்களில் மட்டும், இன்னும் கொஞ்சம் குள்ளமாக இருந்திருக்கலாமோ என்று நான் நினைத்ததுண்டு. தினமும் இரவு 8 மணிக்கு முன்பு சாப்பிட்டு விடுவேன். எனது உடம்பு கச்சிதமாக இருப்பதற்கு அதுதான் காரணம், என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment